×

குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மீன்பிடித் தொழிலாளி தற்கொலை

குளச்சல், செப். 7: குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரிய கிமல் பென்டோ(42). மீன்பிடி தொழிலாளி. அவருக்கு திருமணமாகி கனிதா (35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.கனிதா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். மரிய கிமல் பென்டோவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிதா தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மரிய கிமல் பென்டோ மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் தனியாக இருந்த மரிய கிமல் பென்டோ தனது அறைக்கு சென்று மின்
விசிறியில் தூக்குப் போட்டுள்ளார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது தாயார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மரிய கிமல் பென்டோ தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர். இது குறித்து கனிதா அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்று விட்டதால் வேதனையடைந்த மரிய கிமல் பென்டோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

The post குளச்சல் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மீன்பிடித் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Maria Kimal Bento ,Kodimuna ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது